ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்தாக எழுந்த புகாரில் பிரபல பாலிவுட் நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தரா மும்பையில் திடீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழ் ரசிகர்களுக்கு பிரபு தேவாவின் ரோமியோ படத்தின் மூலமும் நடிகர் விஜயின் குஷி படத்தில் வரும் மெகரினா பாடல் மூலமும் பரிச்சியமானவர். இவரின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவருக்கு வயது 45. ராஜ் குந்த்ராவின் மேல் ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை மொபைல் செயலிகளில் வெளியிட்டதாகக் கூறி காவல்துறை இவரை கைது செய்துள்ளது.
ராஜ் குந்தராவை கைது செய்த 11 பேர் கொண்ட காவல் துறை குழு இவர் மேல் ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் உமேஷ் என்ற நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சட்ட விரோத செயலுக்கு காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றத்தை தான் செய்யவில்லை என மறுத்துள்ள ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Actress Shilpa Shetty’s husband & businessman Raj Kundra has been taken for medical examination at JJ hospital by Property Cell of Mumbai Police’s Crime Branch
He was later taken to Mumbai Police Commissioner’s office. pic.twitter.com/Nvv8zd3nY2
— ANI (@ANI) July 19, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்