இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பாக இத்தொடரின் அட்டவணை பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் வெளியாகும், ஆனால் இந்த முறை இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால் அட்டவணை தாமதமாக வெளியிடப்படும் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்திருந்தது.
தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!
இந்த பரபரப்பான சூழ்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் அட்டவணை தொடர்பான முக்கிய தகவல் அப்டேட் உள்ளது. அதாவது IPL தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ நிர்வாகம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .