இந்தியன் சூப்பர் லீக் தொடர், 12 அணிகளுக்கு இடையே கொல்கத்தா, மும்பை, கேரளா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிராக ஜாம்ஷெட்பூர் அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தனர். அதன்படி போட்டியின் 45 வது நிமிடத்தில் நந்தகுமார் ஈஸ்ட் பெங்கால் சார்பாக கோல் ஒன்றை அடித்து அசத்தினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு., இந்த மாவட்டத்தில் தான்? வெளியான முக்கிய தகவல்!!!
இதன் மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில், ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், ஜாம்ஷெட்பூர் அணியின் ராஜ் மற்றும் ஜெர்மி ஆகியோர் 81வது மற்றும் 90+7 நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். இதன் காரணமாக 2-1 என்ற கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை ஜாம்ஷெட்பூர் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம், புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி 20 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளது.