இந்திய அணி T20 உலக கோப்பையை தவற விட்டதால் 2023 ஆம் ஆண்டு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முனைப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அரங்கேற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி எப்படியாவது பட்டத்தை வெல்ல கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வளர்ந்து வரும் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருந்த போதிலும் ஒரு சில தவறுகளால் கோப்பையை வெல்வதில் கோட்டை விடுகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணியில் முக்கிய வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லாததாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் உச்சத்தை தொட இந்த பிரபலம் தான் உதவினாரா?? இத்தனை நாள் இது தெரியமா போச்சே!!
தினேஷ் கார்த்திக், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், ஷிகர் தவான், விருத்திமான் சாஹா போன்றவர்கள் சர்வதேச போட்டி, IPL தொடரிலும் அதிரடி காட்டி பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய புள்ளியாக இருந்துள்ளனர். ஆனால் இனி வரும் போட்டிகளில் இவர்கள் இடம் பெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இவர்கள் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச போட்டிகளில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.