இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு தேர்வினை உகந்த நேரத்தில் நடத்தி அவர்களின் பணிக்காலத்தை நீட்டிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.
பணிக்காலம் நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிக்காலத்தை நீட்டிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.
நீட் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வினை விரைவில் முடித்து அவர்கள் வரும் வரை தற்போதைய முதுநிலை மாணவர்கள் பணியில் இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த சுற்றறிக்கை மருத்துவ கல்லூரிகளுக்கும் மருத்துவ கவுன்சில் அனுப்பி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |