உலகிலேயே முதன் முறையாக இந்திய ராணுவத்திற்காக புல்லட் ப்ரூப் ஹெல்மெட்டை மேஜர் அனூப் மிஸ்ரா கண்டுபிடித்துள்ளார். இதனால் போர்க்களத்தில் வீரர்கள் தலையில் குண்டு துளைக்காத வகையில் தற்காத்துக் கொள்ள முடியும்.
நவீன ரக புல்லட் ப்ரூப் ஜாக்கெட்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்திய ராணுவத்தின் பழைய புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை அணிந்ததால் போர்க்களத்தில் குண்டு அடி பெற்றவர் மேஜர் அனூப் மிஸ்ரா. இதனால் இவர் இந்திய ராணுவத்திற்கு நவீன ரக புல்லட் புரூஃப் ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். மேலும் இவர் குண்டு துளைக்காத ஹெல்மட்டையும் தயாரித்து உள்ளார். இந்த வகையில் ஹெல்மெட் தயாரிக்கப்படுவது இது தான் முதல் முறை.
ஏகே 47 ஆல் சுட்டாலும்..!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஏகே 47 ரக துப்பாக்கியின் மூலம் 10 மீட்டர் தூரத்தில் இருந்து சுட்டாலும் குண்டு துளைக்காத மாதிரி இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேஜர் அனூப் மிஸ்ரா இந்திய ராணுவ பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
Gun Shot Locator..!
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
மேஜர் அனூப் மேலும் GunShot Locator எனப்படும் கருவியையும் உருவாக்கி உள்ளார். இது தீவிரவாதிகள் துப்பாக்கியை பயன்படுத்தினால் அவர்கள் 400 மீட்டர் தொலைவிற்குள் இருந்தால் அவர்களை கண்டறிய உதவும். ராணுவ பொறியியல் கல்லூரியில் இருந்து இந்திய ராணுவத்திற்காக 1.58 லட்சம் குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்களை வாங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |