நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND vs NZ:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியின் சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டை சதத்தால், 349 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்து. இலக்கை அடைய முயற்சித்த நியூசிலாந்து அணி கிட்டத்தட்ட நெருங்கிய நிலையில் 337 ரன்களுக்குள் சுருண்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பந்து வீச தவறியதால், ஸ்லோ ஓவர் ரேட்டிங் அடிப்படையில் ஒருநாள் போட்டிக்கான கட்டணத்தில் இருந்து இந்திய அணிக்கு 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெஸ்ஸிக்காக ஒரு விவசாயி இப்படிலாம்மா செய்வாங்க…, வைரலாகி வரும் ரசிகரின் செயல்!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், நாளை நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டியில், இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றிவிடும். இதனால், இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியை வெல்ல போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.