இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் உலகக் கோப்பை தொடரின் 13வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 45 லீக் போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றன. முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்தை வென்றது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 16) 2வது அரையிறுதி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழக இல்லத்தரசிகளே…, ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் காய்கறிகள்…, ஒரு கிலோ விலை நிலவரம் இதோ!!
இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுநாள் (நவம்பர் 19) இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இப்போட்டிக்காக ரசிகர்களுக்கு ஓர் சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, போட்டி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக, வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் விமான சாகசங்களை நிகழ்த்த இந்திய விமானப்படை திட்டம் திட்டி உள்ளது. இதற்கான ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.