பொதுவாக இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு சென்று தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து கேஸ் புத்தகத்தையும் ரெகுலேட்டரையும் வங்குவார்கள். கேஸ் புத்தகத்தை வாங்கும் பொழுது கூடவே ஒரு சிலிண்டரையும் கொடுப்பார்கள். அந்த சிலிண்டரில் கேஸ் தீர்ந்து போனால், போன் மூலம் புக் செய்து கொள்ளுவார்கள். ஆனால் தற்போது மிகவும் எளிமையான வழிமுறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செயல்படுத்தி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இனிமேல் சிலிண்டர் வேண்டும் என்றால் 8454955555 என்ற எண்ணிற்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்க மொபைலுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை ஓபன் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு விநியோகஸ்தர் உங்களை அழைத்து பேசி சிலிண்டரை உங்களிடம் ஒப்படைப்பார்கள் என்று இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் குறையும் குழந்தைகளின் சேர்க்கை…, அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!