சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒவ்வொரு மாதத்திற்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சிறந்த வீரரை ஐசிசியானது அறிவித்துள்ளது. கடந்த மாதம் அதிக அளவில் டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றதால் இதில் சிறந்த வீரருக்கே ஐசிசி விருதை வழங்கி உள்ளது. அதாவது, இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடியது.
பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி., ஜூன் 30 வரை கோடை விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
இந்த தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதில், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இரட்டை சதம், ஒரு அரைசதம் உட்பட 560 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவின் ஜெய்ஸ்வாலை (player of the month) பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக ஐசிசியானது தேர்வு செய்துள்ளது. இவர் கடந்த வருடம் தான் சர்வதேச அணிக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல பெண்களுக்கான ஐசிசி விருதில் ஆஸ்திரேலியாவின் அனாபெல் சதர்லேண்ட் தேர்வாகியுள்ளார்.