உத்தராகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரை நடைபெறுவதால் நாளை முதல் ஜூலை 26 ஆம் தேதி வரைக்கும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாவனியை தொடர்ந்து Love ப்ரோபோஸ் செய்த அமீர் – மோதிரம் கொடுத்து காதலை சொல்லி மகிழ்ச்சி!!
பள்ளிகளுக்கு விடுமுறை:
ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக உத்தராகண்ட் மாநிலத்தில் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடை பெறுவது வழக்கத்தில் மாறாத ஒன்று. இந்த கன்வார் யாத்திரையில் பக்தர்கள் உத்தரகாண்டில் உள்ள புனித தலங்களுக்கு சென்று கங்கை ஆற்றின் நீரை எடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள் என்பது மரபு.இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனாவின் தாக்கத்தால் கன்வார் யாத்திரை நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு வழக்கம் போல் நடைபெற இருக்கிறது என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த யாத்திரை ஜூலை 14ல் இருந்து நடைபெற்று கொண்டிருப்பதால் நாளை முதல் ஜூலை 26 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை நடைபெறுவதால் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த யாத்திரையில் எந்தவித பிரச்சனையும் அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க புனித தலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.இதனை கருத்தில் கொண்டு யாத்திரை நடக்கும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்