சமீபத்தில் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி தவறாக பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர்கள் பலரும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். தற்போது இந்த பிரச்சனை அடங்கிய நிலையில் மீண்டும் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் எனது நற்பெயருக்கு களங்கம் வரும்படி செய்துள்ளனர். எனவே இவர்கள் மூவரும் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளனர். அதாவது மன்சூர் அலிகான் பேசியதற்காக த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஒரு நடிகராக இருந்து கொண்டு இப்படி பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா?? நீங்கள் தொடர்ந்து சர்ச்சையான செயல்களில் ஈடுபட்டு வருகிறீர்கள். எனவே இனிவரும் நாட்களில் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் உணர வேண்டும் என மன்சூர் அலிகானை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். மேலும் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கிற்கு திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி, பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை நீதிபதிகள் டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இலவச பேருந்து வசதி., ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை அரசே பாதுகாக்கும்.., போக்குவரத்து அமைச்சர் உறுதி!!