மதுரை, விருதுநகர் உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

0

வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேகமூட்டம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது. சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இதன் அறிக்கையில், ‘அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யயக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (செ.மீ ): அதிகபட்சமாக விரகனுர் அணை (மதுரை ), மதுரை ஐ.எஸ்.ஆர்.ஓ., (மதுரை ) தலா 10, குறைந்தபட்சமாக எட்டயபுரம் (தூத்துக்குடி ),சித்தாம்பட்டி (மதுரை ) தலா 3. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here