சர்வதேச சந்தையில், ஏற்பட்ட எரிவாயு பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை இரண்டு மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு திட்டம்:
பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர். தற்போது, இந்த சிலிண்டர் விலையை, உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த விலை உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் சமையல் எரிவாயு விலை இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தில், இந்த எரிவாயு விலை ஒவ்வொரு டாலராக உயரும் போதும், இந்தியாவில் 4.5 ரூபாய் உயரும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில், மேற்கொண்டு உயரும் என்பது பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்