ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் – கால அவகாசம் நீட்டிப்பு..!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரசு அதிரடி அறிவிப்பு!!
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேதியை நீட்டித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார்.

ரேஷன் பொருட்கள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 25ம் தேதி அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தொழில்கள் முடங்கி வருமானம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் அரசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடுமையாக இருக்கும் – புயல் ராமச்சந்திரன் எச்சரிக்கை..!

இந்நிலையில் ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்களை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஜூலை 10ம் தேதி வரை இலவச பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் அறிவித்து உள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here