உலகம் முழுவதும் நாளை (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பெண்மையைப் போற்றுவோம்..!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த சலுகையை இந்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இலவசமாக 142 புராதன இடங்களை பெண்கள் பார்வை இடலாம். இதில் உலக அதிசயமான தாஜ்மஹாலும் அடங்கும்.
தாஜ்மஹாலை பார்வையிட இந்தியர்களுக்கு ரூ.50ம், வெளிநாட்டினருக்கு ரூ. 1,100ம் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் அரசின் இந்த புதிய உத்தரவு பெண்களின் தியாகத்திற்கு மதிப்பளிப்பதாக உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |