இருமணங்கள் இணையும் திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று அனைவரும் சொல்வது வழக்கம். அந்த வகையில் இறப்பிலும் இரு இருமணங்கள் இணைந்த சம்பவம் குறித்து இதில் காணலாம். அதாவது நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் திரீஸ் வான்ஹாட் மற்றும் அவரது மனைவி யூஜெனி ஆகிய இருவரும் தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசிடம் கருணை கொலை செய்யக்கோரி முறையிட்டிருந்தனர்.
அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல இனி இவங்களுக்கு ஓய்வூதியம்…, மாதம் ரூ. 2000 வழங்க முதல்வர் அறிவிப்பு!!
இதை அடுத்து இருவருக்கும் விஷ ஊசி செலுத்தப்பட்டு கருணை கொலை செய்யப்பட்டனர். அந்த இறுதி நொடியிலும் இருவரும் கரங்களைப் பற்றிய படி மரணித்தது பலரையும் உருக்கமடைய செய்துள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் இவ்வளவுதான் வாழ்க்கை அதில் எத்தனை போட்டி பொறாமை எல்லாம் கடந்து போகட்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.