கராச்சியில் உலா பங்குசந்தையில் இன்று காலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உதவி காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
தாக்குதல்:
வழக்கம் போல் இன்றும் கராச்சியில் உள்ள பங்கு சந்தை பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்து இருக்கிறது. திடீர் என்று அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் மெயின் கேட்டில் கையெறி குண்டை வீசி தாக்கி உள்ளார்.
அங்கு காவலுக்காக இருந்து உள்ள போலீசாரும் இவர்களுக்கு எதிராக சண்டையில் இறங்கி உள்ளனர். இந்த சண்டையில் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் போலீசாரால் கொலை செய்யப்பட்டனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
![Pakistan terrorists](https://cdn.dnaindia.com/sites/default/files/styles/full/public/2020/02/28/895896-terrorism.jpg)
இந்த சண்டையில் 1 உதவி ஆய்வாளர், 4 பாதுகாப்பு காவலர்கள் பரிதாபமாக உயிர் இழந்து உள்ளனர். மேலும், சிலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்து உள்ள சிலரை உடனடியாக அருகவே உள்ள மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளனர். பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்ளது. ஏனெனில், சுட்டு கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் இந்த அமைப்பின் தற்கொலை படை வீரகள் என்று தெரிவித்து உள்ளது.