சிறை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழப்பு – முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்..!

0

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தமிழக முதல்வர் பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறியதாக கைது..!

ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் கைது செய்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்தார்கள்.

போலீசார்கள் காவல் நிலையத்தில் அவர்கள் இரண்டு பேரையும் கடுமையாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்..!

இந்நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. கூறியதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here