பிரபல கூடைப்பந்து நட்சத்திர வீரர் கோப் பிரையன்ட், அவரது 13 வயது மகள் விபத்தில் பலி..!

0

அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன் பயணித்த அவரது 13 வயது மகள் கியான்னாவும் இந்த விபத்தில் பலியானார்.

கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் 5 முறை என்பிஏ சாம்பியன் மற்றும் 2 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கூடைப்பந்து வரலாற்றிலேயே ஒரு லெஜெண்ட் ஆக வலம் வருபவர். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக கடந்த 20 வருடங்களாக கூடைப்பந்து விளையாடி வருகிறார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இவர் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேற்கு புறநகர்ப் பகுதியான காலாபஸாஸ் மலைப்பகுதியில் ஹெலிகாப்டரில் தனது மகள் உட்பட 9 பேருடன் பயணித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் கோப் பிரையன்ட் (41) மற்றும் அவரது மகள் கியானா (13) உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். இது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களையும், ஹாலிவுட் நட்சத்திரங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here