அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன் பயணித்த அவரது 13 வயது மகள் கியான்னாவும் இந்த விபத்தில் பலியானார்.
கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் 5 முறை என்பிஏ சாம்பியன் மற்றும் 2 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கூடைப்பந்து வரலாற்றிலேயே ஒரு லெஜெண்ட் ஆக வலம் வருபவர். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக கடந்த 20 வருடங்களாக கூடைப்பந்து விளையாடி வருகிறார்.
![Image result for whatsapp logo](https://cdn2.iconfinder.com/data/icons/2018-social-media-app-logos/1000/2018_social_media_popular_app_logo-whatsapp-512.png)
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
![](https://enewz.in/wp-content/uploads/2020/01/Kobe-Bryant-with-1024x683.jpg)
இவர் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேற்கு புறநகர்ப் பகுதியான காலாபஸாஸ் மலைப்பகுதியில் ஹெலிகாப்டரில் தனது மகள் உட்பட 9 பேருடன் பயணித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் கோப் பிரையன்ட் (41) மற்றும் அவரது மகள் கியானா (13) உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். இது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களையும், ஹாலிவுட் நட்சத்திரங்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |