எதிர்நீச்சல் சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. குணசேகரன் தான் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தார் என்ற விஷயம் தெரிந்து ஈஸ்வரி, ரேணுகா, ஜனனி எல்லோரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இன்னொரு பக்கம் வீட்டு பெண்களை வைத்தே குணசேகரன் சொத்தை எப்படியாவது தன் மாற்றி விட வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜனனி, ஜீவானந்தத்திடம் குணசேகரன் தான் கொலை செய்தார் என்ற விஷயத்தை சொல்ல வேண்டாம் என நந்தினி, ரேணுகா, ஈஸ்வரியிடம் சொல்லுகிறார். அடுத்ததாக குணசேகரன் வளவனுக்கு இன்னும் பணம் கொடுக்காததால் வீட்டுக்கே வந்து பிரச்சனை செய்கிறார். மேலும் கேட்ட பணத்தை கொடுக்கலான உண்மையை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டுகிறார். இதனால் குணசேகரன் வளவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.