நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக தற்போது ஹிமாச்சல அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அங்குள்ள மொத்தம் 10 ஆயிரத்து 500 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளனர்.
இதற்கான காரணம் என்னவென்றால் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிப்பதால் மாணவர்களின் சேர்க்கை அரசு பள்ளிகளில் குறைந்து கொண்டே வருகிறது. எனவே மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த தற்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை பின்பற்ற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஆங்கில வழிக் கல்விக்கான புத்தகங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அச்சடித்து வழங்கவும் தொடக்க கல்வித்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மகளிர் உரிமை தொகை: இத்தனை பேருக்கு கிடைக்காமல் போனதற்கு இவர்கள் தான் காரணம்? அதிர்ச்சி தகவல்!!!