தமிழகத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இன்ஜினியரிங் முடித்து வெளியே வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாத நிலையிலும், இன்ஜினியரிங் படிக்க பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த சூழலில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 2024-25 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்களுக்கு, 20 சதவீதம் கல்வி கட்டணம் உயர்த்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. விஜயுடன் மோதும் அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!
அதன்படி தற்போதைய மேனேஜ்மென்ட் கோட்டாவின் கட்டணமான ரூ.85,000லிருந்து ரூ.1.25 லட்சம் வரை உயர்த்தலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பொங்கியப்பன் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.