மாணவர்களை குறிவைக்கும் எலோன் மாஸ்க்…, அடுத்த திட்டம் இதுதானா?? வெளியான முக்கிய தகவல்!!

0
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், சமூக வலைத்தளமான X தளத்தின் நிறுவனரான எலோன் மாஸ்க், ட்விட்டர் தளத்தின் CEO வாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில், குறிப்பாக டிவிட்டரின் பெயரை மாற்றி X தளமாக மாற்றி அமைத்தார். இந்நிலையில், இவர் சொந்த பள்ளி, கல்லூரியை தொடங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, குழந்தைகளுக்கான தொடக்க கல்வி, உயர் கல்விக்கு உதவும் வகையில் இருப்பதற்கான கல்வியை தொடங்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, அறிவியல், கணினி, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்தவைகளை தெளிவாக புரிந்து கொண்டு புதுமையான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க உள்ளார். இதற்கிடையில், புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்திற்கு இவர் 100 மில்லியன் டாலர்களை நன்கொடை அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here