மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நிலையங்களில் அந்தந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள 600 சுகாதார நிலையங்களில் இ ஹெல்த் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி 393 மருத்துவமனைகளில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 22 தாலுகாவில் உள்ள மருத்துவமனைகள், 27 சுகாதார நிலையங்கள், 453 குடும்ப சுகாதார மையங்கள், 49 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த இ ஹெல்த் அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் மக்கள் ஆன்லைனிலேயே OP டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இதை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளில் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக மருத்துவர் பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.