சென்னை தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல் – 150 கோடி கடனை கட்டாததால் அதிகாரிகள் அதிரடி!!

0

சென்னை தி நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை, இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்கு சீல் :

சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் கடை இயங்கி வருகிறது. அதேபோல், உஸ்மான் சாலையில் சரவணா தங்க மாளிகை இயங்கி வருகிறது. இந்த இரண்டு இடங்களை காட்டி, இந்த நிர்வாகம் இந்தியன் வங்கியில் 150 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் பெற்றதற்கான நிலுவை தொகையை கட்டாமல் இதுவரை காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு  வங்கி நிர்வாகத்தினர் நீதிமன்றம் சென்றனர்.

ஆனால், இதுவரை இந்த நிர்வாகம் நிலுவைத் தொகையை கட்ட எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து கடந்த டிசம்பர் 15-ல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது அடமானம் வைக்கப்பட்டு, கடன் பெற்ற இடத்தை சீல் வைத்து 60 நாட்களில் வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, நோட்டீஸ் அனுப்பி 15 நாட்கள் ஆகியும் இதுவரை கடை நிர்வாகம் சார்பில் எந்த பதிலும் தெரிவிக்காததால், நீதிமன்ற உத்தரவின்படி இந்த இரண்டு இடங்களில் உள்ள கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கை இந்தியன் வங்கி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here