கொரோனா தொற்றினால் இசையுலகிற்கு மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. பல பக்தி பாடல்களை பாடிய ஆலப்பி ரங்கநாத் தற்போது கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளார். திரையுலகினர் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல் – 150 கோடி கடனை கட்டாததால் அதிகாரிகள் அதிரடி!!
ஆலப்பி ரங்கநாத்:
கொரோனாவினால் நாளுக்கு நாள் பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை பற்றி தமிழ் மற்றும் மலையாளத்தில் பல பக்தி பாடல்கள் பாடிய இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். இதுவரை இவர் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இவர் சில நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி ஆலப்பி ரங்கநாத் மருத்துவனையிலே தனது 72 ஆவது வயதில் காலமானார். இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்