தமிழ்நாடு டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் காவிரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் காவிரி மேலாண்மை குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்து விடவில்லை. ஜூன் 12ஆம் தேதி முதல் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் கூட போதுமான நீர் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதால், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதன் முடிவில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து நேரில் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வேளாண் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
சீமான் மீதான பாலியல் புகார் விவகாரம்.., நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி!!