குழந்தைகளை வேகமாக தாக்கும் வைரஸ் – நான்கு நாட்களுக்குள் 7 சிறார்கள் பலியான சோகம்!!

0

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் 3 ம் அலை வேகமாக பரவி வருவதாகவும், இது நான்கு நாட்களுக்குள் 7 குழந்தைகளை காவு வாங்கி இருப்பதாகவும் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3ம் அலை:

இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனாவின் மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் மூன்றாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக இந்த வைரஸ் குழந்தைகளை தாக்குவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுவரை அதாவது, ஜனவரி 9 முதல் 12 ஆம் தேதி வரை 7 குழந்தைகள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு உள்ளிட்ட வைரஸ் உபாதைகள் இருந்தால், நிச்சயம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என பெற்றோர்களை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here