நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போருக்கு இந்த ஆண்டு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் ரேஷன் கார்டு யாருடைய பெயரில் வழங்கப்படுகிறது அவருக்கு வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இருக்கக் கூடாது.
குடும்ப வருமானத்தின் அடிப்படையில் எந்த ரேஷன் கார்டு வழங்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும். மேலும் புது கார்டு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்திடம் விசாரிக்கும் போது ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனடியாக அவர்களுக்கு புது ரேஷன் கார்டு வழங்குவது ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.