மலேசியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இனி விசா இல்லாமல் மலேசியாவுக்கு வரலாம்.
![](https://enewz.in/wp-content/uploads/2023/11/1-2-16.jpg)
அதுமட்டுமின்றி விசா இல்லாமல் 30 நாட்களுக்கு தங்கலாம். இந்த வசதி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் குற்ற பின்னணியில் சம்பந்தம் உடையவர்களா என சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.