தமிழக  அரசு பேருந்து இந்த நாளில் இயங்காது.., அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக  அரசு பேருந்து இந்த நாளில் இயங்காது
தமிழகத்தில் இயங்கும் அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய தொகையை உயர்த்த வேண்டும் என்று சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது   ‘அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை உள்ளிட்டவற்றை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
குறிப்பாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் தொடங்க வேண்டும். மேலும் போக்குவரத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை அரசு விரைவில் நிரப்ப வேண்டும் என கோரிக்கை  வைக்கப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் டிசம்பர் 19ம் தேதி, ‘ஸ்டிரைக் நோட்டீஸ்’ வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here