தமிழகத்தில் மேலும் 6 பேர்க்கு கொரோனா உறுதி – சமூக பரவலாக மாறி விட்டதா கோவிட் 19..?

0

தமிழகத்தில் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதுவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்களை மட்டுமே தாக்கி இருந்த கொரோனா வைரஸ் தற்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரவத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 35 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து உள்ளது. மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

மேலும் ஈரோடு மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தாய்லாந்து சென்று வந்தவர்களுடைய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்களுக்கு மட்டுமே உறுதிசெய்யப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சமூக பரவலாக மாறி உள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் தற்போது தீவிரமடைந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறித்து அறிய மத்திய அரசு சிறப்பு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. www.stopcoronatn.in என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here