செய்தித்தாள் மூலம் பரவும் கொரோனா..? உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!

0

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் செய்தித்தாள் மூலமும் கொரோனா பரவுமா என்ற சந்தேகத்திற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

அறிவியல் ஆதாரம் இல்லை..!

செய்தித்தாளை அதிகமான நபர்கள் கையால் தொட்டு மற்றவர்களுக்கு கிடைப்பதால் அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அறிவியல் பூர்வமாக எந்த விதமான ஆய்வும் நிரூபிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் எண்ணிக்கை – 19 ஆயிரத்தை தாண்டியது..!

மேலும் மக்கள் செய்தித்தாளை பயன்படுத்திய பின்பு கைகளை 2 அல்லது 3 முறை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்க முடியும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here