பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி என்ற 3 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசி செலுத்த மக்கள் தயக்கம் காட்டினாலும் பின்னர் அதிகரித்து வரும் தொற்றால் மக்கள் தாமாகவே தடுப்பூசி செலுத்த முன்வந்து உள்ளனர்.
தற்போதய நிலவரப்படி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 26 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது என கூறியுள்ளது. மேலும் பிற செலவுகளை பூர்த்தி செய்ய தனியார் சந்தையில் கூடுதல் விலையில் கோவாக்சின் தடுப்பூசிவிற்பனை செய்யப்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்