நாளுக்கு நாள் கூடும் கொரோனா தொற்று.. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

0
நாளுக்கு நாள் கூடும் கொரோனா பாதிப்பு.. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 38 பேர் இந்நோய் தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா அதிகரிப்பு:

இந்தியாவில் ஒவ்வொரு நாலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசாங்கமும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படும் இடங்களில் ஊரடங்கு போடும் சூழ்நிலையும் நிலவி வருகிறது.இதனை தொடர்ந்து நாட்டில் ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு நாளில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு, உயிரிழப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 38 பேர் உயிர் இழந்துள்ளனர்.இதனால் இந்தியாவில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,557ஆக உயர்ந்தது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,36,89,989ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் ஒரே நாளில் 16,482 -பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,28,356 -ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here