கொரோனவால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு? நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிரம்!

0
கொரோனவால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு? நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

தமிழகத்தில் கட்டப்படுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வாரங்களில் கொரோனா அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தொற்று மிக வேகமாக தீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்டுகிறது. இதை தொடர்ந்து விரைவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுப்பது, மேலும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள்,பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here