நாட்டில் வெடித்த வன்முறை போராட்டம் – பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட பொது மக்கள்!

0
நாட்டில் வெடித்த வன்முறை போராட்டம் - பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட பொது மக்கள்!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வந்த நிலையில் மக்கள் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை மக்கள் போராட்டம்:

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகள் ஆகாயத்தை தொடும் அளவிற்கு உயர்த்தப்பட்டது.இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது.இந்த சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் பிரதமர் பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நாட்டின் நிலை மாறவில்லை என்று இலங்கை மக்கள் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிடில் பதவியை விட்டு விலகுமாறு ரணில் விக்ரமசிங்க வீட்டு முன்பு மக்கள் கோஷம் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு முன்னதாக நடத்திய போராட்டத்தின் மூலமாக முன்னாள் பிரதமர் ராஜபக்சே பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here