தமிழ்கத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனை மீறுவோருக்கு காவலர்கள் நூதன தண்டனை என்ற பெயரில் தண்டனைகள் வழங்குவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மரியாதையுடன் நடத்துங்கள்:
ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களை நூதன தண்டனை எனும் பெயரில் அவமதிக்க வேண்டாம் எனவும் தக்க மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் டிஜிபி திரிபாதி காவலர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
மேலும் அவமரியாதை செய்யாமல் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்குமாறும் தெரிவித்தார். காவல் துறையினர் சமூக இடைவெளிகளை பின்பற்றி பணி ஆற்றுமாறும் டிஜிபி திரிபாதி இன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |