தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!!

0

தமிழகத்தில் பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மழைக்காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ள காரணத்தால் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், அத்துடன் இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் நிலவுவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

rain
rain

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமனல, காஞ்சிபுரம்மேலூர், ராணிப்பேட்னட, புதுச்சேரி மற்றும் கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநினல 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனபதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here