இன்னும் 14 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் – கருத்துக்கணிப்பால் மக்கள் பீதி!!

0

அடுத்த இரண்டு வாரத்திற்குள் கொரோனா பாதிப்பு உச்சம் அடையும் என்ற சென்னை ஐஐடியின் கருத்து கணிப்பால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

மக்கள் பீதி:

நாட்டில் டெல்டா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள், மட்டுமே பொது இடங்களில் நடமாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டில் மூன்றாம் அலை பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் எச்சரித்தது.

தற்போது, இந்த வைரஸ் பரவல் குறித்த முக்கிய கருத்து கணிப்பு ஒன்றை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. இதன்படி, மூன்றாம் அலை பாதிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் உச்சம் அடையும் எனவும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள், பயங்கர அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here