நட்சத்திர தம்பதிகளாக விளங்கிய நாக சைதன்யா சமந்தா தம்பதி சென்ற வருடம் தங்கள் பிரிவை அறிவித்தனர். பல சர்ச்சைகள் இது குறித்து எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் தற்போது தான் இதுகுறித்து நாக சைதன்யா குடும்பம் பேச தொடங்கியுள்ளனர்.
தற்போது நாக சைதன்யாவின் தந்தை நாக அர்ஜுனா இது குறித்து பேசியுள்ளார். அதாவது “நான் மிகவும் வருத்தப்பட்டேன். அதே சமயம் நாக சைதன்யாவும் எங்களை பற்றி நினைத்து கவலைப் பட்டார். இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவின் முடிவு மட்டுமே. என் மகனை விட சமந்தா தான் விவாகரத்து பெற்றுக்கொள்ள மிகவும் விரும்பினார்” என்று நாக அர்ஜுனா கூறியுள்ளார்.
சமீபத்தில் கூட எனக்கு சிறந்த திரைப்பட ஜோடி சமந்தா தான் என்றும், சமந்தா சந்தோஷம் தான் தன் சந்தோஷம் என்று நாக சைதன்யா கூறி இருப்பார். இதை வைத்து எல்லாம் பார்க்கும் போது சமந்தாவின் விருப்பத்தை தான் நாக சைதன்யா நிறைவேற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்