சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதி ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். ஆனால் சென்னையில் குடியிருக்கும் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களுக்கும் கிடைக்குமா? என குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நிதிக்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை மூலம் விநியோகிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இதில் சொந்த ஊரில் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினரும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்யலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.