மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி கூடுதலாக 4 சதவீதம் உயர இருப்பதாக பலரும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உயர்த்தப்பட்டது. தற்போது 3 மடங்காக மத்திய அரசு உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ இதுவரை வெளிவரவில்லை. இருந்தாலும் விரைவில் நிச்சயமாக அறிவிக்கப்படும் என அரசியல் வல்லுநர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர்.
ஆதார்-பான் கார்டை இணைக்கவில்லையா? அப்போ இத இனி செய்யவே முடியாது.., வெளியான தகவல்!!!
அப்படி ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 மடங்காக உயர்த்தப்படும் பட்சத்தில், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.26,000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியும் உயர்ந்தால், ஊழியர்களின் மாதாந்திர ஊதியம் பெரிய அளவில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.