இந்தியாவில் மக்களவை தேர்தல் வருவதையொட்டி, வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் மட்டுமல்லாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை விடுவிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு முன்மொழிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த பட்ஜெட்டிலே நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய அளவிலான சம்பள தொகை கிடைக்கும் என்பதால் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
TN TET தேர்வர்களுக்கு குட் நியூஸ்.., இதோ உங்களுக்காக சிறந்த “ONLINE COURSE”…, மிஸ் பண்ணிடாதீங்க!!