நாடு முழுவதும் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற நோக்கில் பல மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டு வருகின்றனர். தற்போது கூட நீட் தேர்வை நிறுத்துவது தொடர்பாக கையெழுத்து வாங்கிக் கொண்டு வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதாவது எத்தனை லட்சம் கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருவதால் நிச்சயம் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை விட கல்வியில் தமிழகம் தான் சிறப்பான நிலையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.