உலக பேட்மிண்டன் தரவரிசை: உச்சக்கட்ட இடத்தை எட்டிப் பிடித்த இந்திய வீரர்கள்!!

0
உலக பேட்மிண்டன் தரவரிசை: உச்சக்கட்ட இடத்தை எட்டிப் பிடித்த இந்திய வீரர்கள்!!
உலக பேட்மிண்டன் தரவரிசை: உச்சக்கட்ட இடத்தை எட்டிப் பிடித்த இந்திய வீரர்கள்!!

சர்வதேச அளவிலான பேட்மிண்டன் தொடர்களில், சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் தரவரிசையை புதுப்பித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டு வருகிறது. இதன்படி, சமீபத்தில் நடந்து முடிந்த மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரினால் இந்த தரவரிசைப் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் H S பிரணாய் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக தரவரிசையில் ஓர் இடம் முன்னேறி 8 வது இடத்தை பிடித்துள்ளார். இவரை போல, கிடாம்பி ஸ்ரீகாந்த் மலேசியா ஓபனில் காலிறுதி வரை முன்னேறி இருந்ததால், 3 இடங்கள் முன்னேறி 20 வது இடத்தையும், லக்ஷ்யா சென் 23 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.05.2023) – முழு விவரம் உள்ளே!!

மகளிருக்கான ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசையில், பி வி சிந்து மலேசிய ஓபனில் அரையிறுதி வரை சென்ற போதிலும் 13 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஓர் இடம் முன்னேறி தங்களது உச்ச இடத்தை பிடித்துள்ளனர். அதாவது, தரவரிசையின் 4 வது இடத்தை எட்டியுள்ளனர். மகளிருக்கான இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் 14வது இடத்தை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here