தமிழகத்தில் வணிக வரி தள்ளுபடி திட்டம் அறிமுகம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் வணிக வரி தள்ளுபடி திட்டம் அறிமுகம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் வணிக வரி தள்ளுபடி திட்டம் அறிமுகம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று (அக்டோபர் 9) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 10) தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூல் செய்ய, சட்டப்பேரவை 110 விதியின் கீழ் “சமாதான திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.50,000க்கும் குறைவாக வரி நிலுவை வைத்துள்ள சிறு குறு வணிகர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதேபோல் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20 சதவீத வரியை மட்டும் செலுத்த வேண்டும். இந்த வரி தள்ளுபடி திட்டத்தின் மூலம் 95,502 வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை தமிழகத்தில் ரூ.25,000 கோடி அளவுக்கு வணிக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

6 வருடத்தில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்., இந்த ஆண்டுக்கான புள்ளி விவரம் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here