தமிழ் மொழி பல்வேறு இலக்கியங்கள், இலக்கணம், உரைநடை என பல்வேறு தொகுப்புகளை கொண்ட செந்தமிழாக உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இதனால் படைப்பாளர்கள் எழுதும் தமிழ் மொழி புத்தகங்களை வாசிக்கும் நபர் கற்பனை கதைக்குள் சென்று விடுவார்கள்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவ்வாறு பல்வேறு ஆசிரியர்களின் நாவல்கள், கட்டுரை, வரலாறு என அனைத்து வகை புத்தகங்களை ஒரே இடத்தில் கிடைக்க செய்ய மாவட்டந்தோறும் புத்தக திருவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் எளிதில் கிடைக்க பெறாத புத்தகங்களை கண்டு மகிழ்வுடன் வாங்கி செல்கின்றனர்.
இதைத்தொடர்ந்து சிறப்புமிகுந்த சுற்றுலாத்தலங்கள், ஆன்மிகத்தலங்கள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டம் அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் வரும் 28ம் தேதி முதல் ஜனவரி 4ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெறும் இத்திருவிழாவில் புத்தகம், காலை, உணவு போன்ற அரங்கங்களை தரமான முறையில் தயார்படுத்தி உள்ளதாக என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கூறியுள்ளார்.