பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆகி இருக்கும் நிலையில் தற்போது வரை இணையத்தில் பேசு பொருளாக உள்ளதை நாம் அறிவோம். இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசன் டைட்டில் வின்னராக மாயா தான் ஜெயிப்பார் என்று அனைவரும் கருத்து கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் அர்ச்சனா ஜெயித்து விட்டார் என்று அறிவித்ததால் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் மாறிமாறி தங்களது கருத்துகளை வெளியிட்ட வருகின்றன. இது தொடர்பாக RJ பிராவோ முக்கிய ஸ்டோரியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், போட்டியாளர்களாக ரசிகர்கள் அவர்களது நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தி அவர்களுக்கு பிடித்தமான நபர்களுக்கு ஆதரவு கொடுப்பதை பாராட்டுகிறேன் என்றார். இனி பாசிட்டிவாக இருப்பதற்கான நேரம் என்னவோ நெகட்டிவ் விஷயங்களை பரப்பக்கூடிய விமர்சனங்களையும் வாக்குவாதங்களையும் தவிர்ப்பது நல்லது எனவும் இறுதியாக உங்களால் முடிந்த அளவுக்கு எங்களை நேசியுங்கள் என அந்த பதிவை முடித்து இருக்கிறார்.